தனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்!!

உச்ச நீதிமன்றத்திற்கு வருவது இன்றுதான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடைசி நாள். இதை முன்னிட்டு அவருக்கு இன்று நீதிமன்ற வளாகத்தில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.


இன்று அவரது அறையில் அவருடன் அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்க இருக்கும் பாப்டே அமர்ந்து இருந்தார். ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ராகேஷ் கன்னா நன்றி தெரிவித்துப் பேசினார். வரும் ஞாயிறு வரை தலைமை நீதிபதி பொறுப்பில் ரஞ்சன் கோகோய் இருப்பார்.



உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்கிறார்.